முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசேதன விவசாயத்தில் ஈடுபட்டு இன்று எல்லா உணவுப் பொருட்களிலும் நஞ்சித்தன்மை ஊடுருவி நஞ்சு கலந்த உணவை உட்கொள்கின்ற நிலை மாறி உள்ளது

மட்டக்களப்பு மாவட்டம் இயற்கை பயிர் செய்கையில் இருந்து குறுகிய காலத்திற்குள் அசேதன விவசாயத்தில் ஈடுபட்டு இன்று எல்லா உணவுப் பொருட்களிலும் நஞ்சித்தன்மை ஊடுருவி நஞ்சு கலந்த உணவை உட்கொள்கின்ற நிலை மாறி உள்ளது இதனால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் நிலை? நீரிழிவு, புற்று நோய் எனபல வகை நோய்தாக்கங்களுக்கும் உள்ளாக வேண்டி ஏற்படும். ஆகவே நாம் எதிர்கொண்ட ஆரோக்கிய மற்ற வாழ்கையில் இருந்து விடுபட்டு எதிர்கால எமது குழந்தைகளின் வாழ்வுக்காக அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயற்பட்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும்.

இது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவூட்ட படுகின்ற போதும் இதனை கவனத்தில் கொள்கின்ற விவசாயிகள் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனாலும் இயற்கை விவசாயத்தை எவ்வாறு கடின உழைப்பு செய்தாயினும் அறிமுகப்படுத்தியாக வேண்டும் எனும் நோக்கின் அடிப்படையில் உக்டா நிறுவனம் வேள்விஷன் நிறுவனத்தின் வழிகாட்டலிலும், அணுசரனையுடனும் இயற்கை வேளாண்மை செய்கையையும், ஏனைய பயிர் செய்கையும் செய்து வரும் இந் நிறுவனத்திற்கு  மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக முனைக்காடு உக்டா பண்ணையில்  2014.02.12ம் திகதி இடம்பெற்ற இயற்கை வேளாமைச் செய்கை அறுவடை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் கருத்து தெரிவித்தார். இந் நிகழ்வில் வேள்விஷன் நிறுவன பட்டிப்பளை முகாமையாளர் திரு.G.J.அணுராஜ் மற்றும் வேள்விஷன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் உக்டா நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பவளக்கொடி வடமோடிக் கூத்து சதங்கை அணிவிழா.

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தினரால் வருடாவருடம் இடம்பெறுகின்ற ஆலய உறசவங்கள், சடங்குகளை முன்னிட்டு பாரம்பரிய வடமோடி , தென்மோடிக் கூத்துக்களை ஆற்றுகை செய்து வருவது வழக்கம். அந்த வகையிலே கடந்த கால ங்களில் அரிச்சந்திரன் மயாணகாண்டம், கும்பகர்ணன் வதை, சராசந்தன் போர், பப்பிரவாகன் நாடகம், நல்லதங்காள் நாடகம், பகாசூரன் சண்டை, உலகநாச்சி, நிர்முகன் வதை(தென்மோடி), அலங்காரரூபன் (தென்மோடி) போன்ற கூத்துக்களை மிகப்பிரமாண்டம்ன முறையில் கூத்தின் அடிப்படை பாரம்பரிய அம்சங்கள் பிரளாமல் ஆற்றுகை செய்துள்ளனர். 

நாகசக்தி கலை மன்றம் 2014ம் ஆண்டிற்கான படைப்பாக னுருத்திரன் தென்மோடி கூத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு

படுவான்கரைப்பிரதேசத்தின் பாரம்பரியத்தை எடுத்தியம்பும் வகையிலும் எமது தமிழர் பாரம்பரியத்தின் பெருமை போற்றும் கலையாகிய கூத்து கலையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு ஆண்டும் பல கூத்துக்களை ஆடி அரங்கேற்றுவதுடன் கூத்துப் போட்டிகளில் கலந்து மாவட்ட மட்டம், மாகாண மட்டம் என வெற்றி பெற்று சாதனை படைத்துக்கொண்டு இருக்கும் நாகசக்தி கலை மன்றம் 2014ம் ஆண்டிற்கான படைப்பாக 2013.12.16ம் திகதி மு.ப.7.30 மணிக்கு நாகலிங்கேஷ்வரர் ஆலயத்தில் அனுருத்திரன் தென்மோடி கூத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. pmkalai